பரவூர்:
தாட்சாயணியுடன், அவரது மக்களும் பேரக்குழந்தை களும் ஒரு சின்னஞ்சிறிய குடிசையிலிருந்து விண்ணை முட்டும் அடுக்குமாடிக்கு குடியேறியதில் மகிழ்ச்சி அடைந்தனர். அடுக்குமாடி வளாகத்தின் சமையலறையில் பால் பொங்கி வழிந்தபோது அவர்களது கண்களிலும் நீர் தழும்பியது. அவர்கள் யாரும் தங்களது மகிழ்ச்சியை மறைக்கவில்லை.
தாட்சாயணியும் அவரது ஆறு குழந்தைகளும் மூடிய கதவுடன் ஒரு வீட்டைக் கனவு கண்டார்கள். அரசாங்கத்தின்லைப் வீட்டுவசதி திட்டம் அவர்களுக்கு ஒரு வீட்டுவளாகத்தையே பரிசாக அளித்துள்ளது. ஒரு குடும்பத்திற்குஅரசே அடுக்குமாடி கட்டுவது இணையற்ற நிகழ்வு. வீட்டுக்கான சாவியை அமைச்சர் ஏ.சி. மொய்தீன் ஆன்லைனில் ஒப்படைத்தார். வி.டி சதீசன் எம்எல்ஏ விழாவிற்கு தலைமை தாங்கினார்.
எழுபத்தைந்து வயது தாட்சாயணி, குழந்தைகள், மருமகள், மருமகன்கள் உட்பட சுமார் 30 பேர் அங்கு வாழ்கின்றனர். தாட்சாயணி மரட்டிபரம்பில் மறைந்த நாராயணனின் மனைவியாவார். நாராயணன் 26 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அவர்களின் பிள்ளைகளின் திருமணத்திற்குப் பிறகு, வீட்டில் இட நெருக்கடி கடுமையாகிவிட்டது. மகள்கள் விஜயா, ரஜினியின் கணவர்கள் இறந்தபோது, அவர்கள் குழந்தைகளுடன் தாய் வீடுதிரும்பினர். இளைய மகன்களான செல்வராஜ், ராஜேஷ் கண்ணன், பிரேம்குமார் ஆகியோரும் திருமணம் செய்ததோடு வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைஅதிகரித்தது.மகன் மது தவிர மற்ற அனைத்து குழந்தைகளும் 2018 இல் லைப் திட்டத்திற்கு விண்ணப்பித்தனர். இடப்பற்றாக்குறையை எதிர்கொள்ள வீட்டுவசதி வளாகம் குறித்த யோசனை கைகொடுத்தது. இந்த வளாகத்தில் தலா 450 சதுர அடி கொண்ட ஆறு வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு படுக்கையறைகள், ஒரு சமையலறை, ஒரு வரவேற்பறை (ஹால்) ஒரு குளியலறை உள்ளது. லைப் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.சதீசனின் தொகுதியில்தான் கேரள அரசின் இந்த வெற்றிக் கதை உள்ளது.
சிறிய மழைச்சாரலில்கூட கசிந்த ஒரு பழைய வீட்டிற்குள் நெரிசலில் வாழ்ந்ததை கூற முயன்றபோது சிலர் வார்த்தையற்றுப் போயினர். சிலரின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அடுக்குமாடியின் மொட்டை மாடியில் இருந்து கைகளை அசைத்தனர். அவர்களின் கனவு நனவாகியதில் நாடு மகிழ்ச்சியடைந்தது.